Monday, July 11, 2011

அவளுக்கு தேவதை என்று பெயர்...



1.
உணவருந்தும் முன்
ஒரு நிமிடம் கண்மூடி இறைவனுக்கு
நன்றி சொல்கிறாய்
நீ.ஒரு மிகச்சிறந்த
ஓவியத்தின்
இறைவழிபாடு கண்டு
என்னை மறந்துபோகிறேன்
நான்.

2.
ஆற்றில் குளித்துவிட்டு
கரையேறுகிறாய்
நீ.ஆற்றுமீன்கள் எல்லாம் துள்ளிவிழுந்து மரிக்கின்றன..பிறவி பயன் அடைந்துவிட்டோம்
என்று முணுமுணுத்தபடி..

3.
உனக்கான கவிதைகளைக்கண்டு
என் புறங்கையில் முத்தமிடுகிறாய்..எங்களுக்கு விரல்கள்,உனக்கு மட்டும் இதழ்களா என்று
கவிதைகளெல்லாம் ஒன்றுகூடி
என்னைப் பழிக்கின்றன!

4.
படபடவென்று பேசிக்கொண்டிருக்கும்
உன் இதழ்களை மூடிவிடுகிறேன்.படபடக்கும் உன் விழிகளால் பேச்சைத்தொடர்கிறாய்
நீ.பட்டாம்பூச்சி பின் ஓடுகின்ற
சிறுவனாக மாறிவிடுகிறேன்
நான்.

5.
தெருவெல்லாம் வீழ்ந்துகிடக்கின்றன
பன்னீர் பூக்கள்..பன்னீர்பூ மரத்திற்கு

யார் சொன்னது உன் வருகையை?

No comments:

Post a Comment