Monday, December 31, 2012

விரும்பாமல் பிரிகிறேன்..

நீ என்னுள் கலந்துவிட்டாய்...

என் ஆழ்மனதில்
அமைதியாக
ஆனந்தமாக
இனித்துக் கொண்டே இருக்கும்
உன் நினைவுகள் என்றும் ...

பிரிந்து விடுவோம்
என்று
முன்பே தெரியும்
இருந்தும்
என்னை நீ முழுமையாக ஆட்கொண்டாய்...

மறுபடியும் நாம் சந்திக்க இயலாது என தெரியும்...

விரும்பாமல் பிரிகிறேன்..
உன்னை...
2012....

நீ எனக்காக செய்த மாற்றங்களால்
என் எதிர்காலம் நன்றாகவே இருக்கும்...

உன் நினைவுகளோடு
என்றென்றும்....

- தினேஷ்குமார் பொன்னுசாமி