Friday, March 16, 2012

சில காதல் கவிதைகள்

நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

*

இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.

*

யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.

*

உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனதுவிழிகளைவண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!

*
தனியேநீமுணுமுணுக்கும்
இனியபாடல்கள்
இசைத்தட்டில்ஒலிக்கையில்
இனிமைஇழப்பதேன்?

*

கைது செய்யப்படாத உறவுகளை எதிர்பார்த்து....!!

பூப்பெய்திய வனிதயைப்போல
வெட்கப்பட்டுக்கொண்டு
மேற்கிலே ஒழிந்துகொண்டது சூரியன்
காட்சி அழகாகத்தானிருந்தது - ஆனால்
ஆறுமணியானதை அறிந்ததும் மனது
அடையாள அட்டையைதேடுகின்றது..

நாள்முழுக்க வேர்வை சிந்தி
நானூறு ரூபா உழைத்து - அதை
நாற்பது தடவை தடவிப்பார்ப்பது போல
அடையாள அட்டையை
தொட்டுப்பார்க்கிறது கைகள்...

இருட்டி விட்டதை
கண்ட இல்லங்கள் எங்கும்
இறுக்கமாகும் இதயங்கள் ..
கைது செய்யப்படாத
உறவுகளை எதிர்பார்த்து....

- ரி.எ.விமல்