Thursday, July 7, 2011

மௌனம்...

அவளைப்பிரிந்து சில வருடங்கள் ஆகியிருந்தது ...
 
அவள் மீதுள்ளதை விட 
என் மீது எனக்கு கோபம் அதிகம் !

ஒரு மாலை வேளையில்  
அவளை அலைபேசியில்

 தொடர்பு கொண்டேன்...
அவளும் பேசினால்....

ஆனால்,
எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை...
 
மௌனம்...

இது

மகிழ்ச்சியின் வெளிப்பாடா ?
 இல்லை
துன்பத்தின் தவிப்பா ...? 
தெரியவில்லை...

நான் அவளுடனிருந்த நாட்களில் 
காரணங்கள் ஏதுமின்றி
கணங்கள் கடந்திருக்கின்றன ....

இப்போது நான் தனிமையில்...
 
தொடரவும் முடியாது... 
முடிக்கவும் மனமில்லை...
என் வாழ்க்கையை... :-(

No comments:

Post a Comment