Wednesday, January 11, 2012

காலம் - சுள்ளி

காடு முழுதும்
சுற்றினேன்
பழைய
சுள்ளிகள் கிடைத்தன
நெருப்பிலிட்டபோது
ஒவ்வொன்றாய்ப்
பேசி வெடித்துப்
பேசின
குரலில்
நாளைச்சுருதி
தெரிந்தது
அணைத்து,கரித்தழும்பு ஆற்றி
நீரிலிட்டபோது
கூசி முளைத்துக்
கூசின இலைகள்
தளிர் நரம்பு
நேற்றினுள் ஓடி
நெளிந்து மறைந்தது

No comments:

Post a Comment