Friday, March 16, 2012

கைது செய்யப்படாத உறவுகளை எதிர்பார்த்து....!!

பூப்பெய்திய வனிதயைப்போல
வெட்கப்பட்டுக்கொண்டு
மேற்கிலே ஒழிந்துகொண்டது சூரியன்
காட்சி அழகாகத்தானிருந்தது - ஆனால்
ஆறுமணியானதை அறிந்ததும் மனது
அடையாள அட்டையைதேடுகின்றது..

நாள்முழுக்க வேர்வை சிந்தி
நானூறு ரூபா உழைத்து - அதை
நாற்பது தடவை தடவிப்பார்ப்பது போல
அடையாள அட்டையை
தொட்டுப்பார்க்கிறது கைகள்...

இருட்டி விட்டதை
கண்ட இல்லங்கள் எங்கும்
இறுக்கமாகும் இதயங்கள் ..
கைது செய்யப்படாத
உறவுகளை எதிர்பார்த்து....

- ரி.எ.விமல்


No comments:

Post a Comment